Tuesday 7 February 2012

தந்ததுன் தன்னை..

பார்வைப் பொருள் உணரும்
பக்குவமே - எந்தனது
வேர் உயிரின் மூச்சுவிடும்
வித்தகமே - என் பயணம்
காண்கின்ற வரலாற்றின்
காற்தடமே - மெய்சிலிர்க்க
நீ வந்தாய் வாழ்வில்
நிறைவெல்லாம் நானாகி,
பூ வந்த வாசம் புலர்கிறது
என் புகழாய்..
நான் என்ன செய்தேன்..?
நடந்தேன்.. - உள்ளிருந்து
ஒவ்வோர் அடிக்கும்
உயிர் கொடுத்துக்கொண்டிருக்கும்
பவ்வியமாய் எனை நடத்தும்
பலமே - எப்பொழுதும்
நீ பக்கம் இரு நிகழ்வாகு
நான் பெறுவேன்
பா இருக்கும் பக்க
பலம்..

No comments:

Post a Comment