புதன், 15 பிப்ரவரி, 2012

காமம்..

உணர்வுகளின் உட் கிளர்ச்சி
உள்ளடக்க முடியாத
கண நேரக் கண்கட்டு
காற்றழுத்த மண்டலம் போல்
புணருணர்வைப் புதைக்கேலா
புதியவகைக் காட்டாறு 
நிண உடலின் தீப்பகுதி
நிஜம் தெரியா எரிமலை வாய்

பருவமற்ற காலநிலை
பண்பறியாப் பாற் குழந்தை
உருவமற்ற உள்ளீடு
உயிரவிக்கும் கொதி ஊற்று
எல்லாம் போய் எரிந்த பின்னர்
எழுகின்ற சா வெறுப்பின்
சொல்லேலாப் பெரு நரகம்
சுடலை வாழ் ஒரு ஞானி..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக