Wednesday 3 October 2018

காணும் கொள்ளேன்..

விடைபெறும் வேளையென்ற
விதியதன் கால்களெந்தன்
உடலினுள் யானைபோல
ஓடுது, ஓசைகூடி

செவியிலே கேட்குமிந்தச்
சீவனின் வாழ்வு நீளம்
புவியினில் அதிகமில்லை
புரியுது, இருந்துமேன் தான்

எழுகுதோ எச்ச மூச்சு?
எதுவித பயனுமற்று
நழுவுதோ நாட்கள், காலா
நடைப்பிணவாடை எந்தன்

பிடரியில் தாக்கித் தாக்கி
பிய்க்குது, போதுமிந்த
உடற்கனம் தாங்கவொண்ணா
உபாதை, காணும் கொள்ளேன்..