Tuesday 7 February 2012

ஆசிகள் அனைத்தும் உனக்கென்றாகுக..!

வீசும் உப்புக்காற்றில்
விளைந்த
வீரத்தமிழுர நெஞ்சே
எங்கள்
வாசம் வனப்பு
உலகம் முழுதும்
வலம்வர வைத்த வழியே
தமிழன்
நிரந்தம் என்று சொல்லின்
இருக்கும்
நிலையென்றானதோர் வைப்பே..

அகவை அடுத்ததென்பது
வயசு மட்டுமா..?
ஆழுமை முதிர்ச்சியும்
அல்லவா தலைவனே..!
காலம் என்பது
நினைவு வாகனம்
கடந்து செல்லலாம்
சென்றிடும், காட்சிகள்
கலங்கலாகத்தெரியுமுன்னரே
காலம் வென்றுதான்
ஆகணும்

கார்த்திகை
பூத்த மைந்தனே
தமிழரின் காலமே
தேசப்பளிங்கின் திரளே..!
உலகின்
ஆசிகள் அனைத்தும்
உனக்கென்றாகுக...

No comments:

Post a Comment