Thursday 16 February 2012

ஏன் இறைவா ?

உணர்ச்சிக் குரியவளை நல்ல
உட்கிடை கொண்ட ஓர் உத்தமியை
புணர்ச்சிக் கென்று கட்டி, விழற்
பொன்னையன் கையிற் கொடுப்பதுவோ?

என்னை ஏன் நீ படைத்தாய்? உள்ளே
ஒரு சிறு சிந்தையை ஏன் அமைத்தாய் ?
திண்ணிய மனபலத்தைப் பல
திக்குகள் சொல்லினும் குனிவறியா
சென்னியை, முதுகடி எலும்பமைப்பை எனைச்
சிக்கலில் மாட்டிட ஏன் கொடுத்தாய்?

எனக்குல கீந்தவன் நீ, எனை
இவ்வளவு தூரமும் கொண்டுவந்து பலர்
கணக்கிலே வைத்தவன் நீ, அது
கல் எழுத்தாவணம் ஆகுமுன்பே
இடக்கிடை தடக்கமிடல், எனை
இழிந்தோர் கைகளால் அளவிடுதல்,
அடுக்குமோ உனக்கிறைவா? சுயம்
அமைத்தவா  தகுதியை அமுக்கிடுதல்
படைப்பிலே பாரிய குற்றமடா - 'திறன்
இருக்கு தென்றால் உடன் தீர்வுகொடு,
இல்லை யெனில் 'எனைத்தீர்த்துவிடு'.

No comments:

Post a Comment