Saturday 3 December 2016

இரெண்டாம் வானம்..

என்னைக் கொண்டாள்
என்னையே கொண்டாள்
தன்னைத் தந்தாள்
தன்னையே தந்தாள்
முன்னைப் பிறப்பின்
மூண்ட தீ முழுதும்
தண்ணியாய்க் குளிர்ந்து
தணிந்தது, என்றுமே

வானம் பரந்தது
பன்மையில்லாது என்கிற
ஞானம் வாழ்விலும்
உண்மையா? இவ்வளவும்
வானமாய்த் தெரிந்தது
வழியிடை மாறிட
நானுளேன் என்பதாய்
நாணுமோர் வானமென்
கானமில் வாழ்வினைக்
கண்டெனை மொண்டது
போனவோர் பிறப்பதன்
பூத்தலா? இல்லையென்
வழமைப் பிரமையா?
வாழ்க்கையின் வழுக்கலா?
இளமையின் சாகிற
ஏக்கமா? அறிகிலேன்

பிறப்பைக் கொடுத்தவா! பின்னரென் வாழ்வினை
இறப்பினில் தோய்த்து எடுத்தவா!  - உறுப்பென
ஒட்டியே வாழ்வுறும் உறவொன் றெனக்கும்
கிட்டிடா விழுவனோ கீழ்..?