Thursday 16 February 2012

யாசிக்கிறேன்..

உன்னுடைய வார்த்தைகளால்
குண்டடிபட்ட
பறவையைப் போல
குப்புற வீழ்ந்து கிடக்கிறேன்
சன்னங்கள் கூட
இந்தளவிற்கு என்னைச்
சேதப் படுத்தியதில்லை,

பல முறை ஏமாந்தாலும்
எந்த நன்றியும் செய்யாத
கால்களின் பின்னால்
வாலாட்டியபடிசென்று திரும்பும்
அனாதை நாய்க்குட்டியைப் போல
ஏக்கம் நிறைந்த விழிகளுடன்
பழைய நினைவுகளை
மட்டுமே பார்த்தபடி
காயங்களை ஆற்றாமல்
காலங்களைத்
தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறேன்,

ஏனெனில்
உன் முத்தங்களால்
மட்டுமே அதனைக்
குணப்படுத்த முடியும்..

No comments:

Post a Comment