Saturday 11 February 2012

முடிவிலி..

திரண்டு அனுபவத்தால்
சிவப்படைந்து கூர்மையுற்ற
இரண்டு விழிகளையும்
அப்படி்யே கைகளினால்
களற்றி எடுத்து வான் நோக்கி
பால் வெளிக்குள்
களன்றேதும் சேதமின்றி எறிந்து விட்டேன்
போகிறது

வழி வழியே எத்தனையோ
தடங்கல்கள் சதி வலைகள்
எல்லாவற்றிலும் தப்பிப் போகோணும்
என் கண்கள்
நல்லதெண்டு நான் நினைச்ச
பால் வெளிக்கு போகோணும்..
அங்கே போய் புவியின்
கண்றாவிக் காட்சி எல்லாம்
மங்கலாய்க் கூடத் தெரியாமல்
புதனிருட்டில்
ஓழிஞ்சிருக்கோணும் ஓரிரு நினைவோடு,
இழிந்த பூமி அழிந்த பின்
என் விழி வேண்டும் அவளோடு

கவனம் பால் வெளியே
என் கண்கள் கண்மணிக்குள்
இறக்கேலா நினைவொடும்
என்னிதயத் துடிப்போடும்
மறக்கேலா உருவுள்ள
என் உயிரின் மனசாள்வாள்

சிவந்த கீழ்ச்சொண்டு
கயல் விழிகள் எனது மனம்
உவந்து தொடுகின்ற
கைவிரல்கள் கணுக்கால்
செல்லத்தில் சிணுங்கேக்கை
உயிர் பருகும் ஓர் வனப்பு
எல்லாம் இருக்கிறது
கண்ணுள்ளே, மிகக்கவனம்
என் முகத்திற் கண்ணிருக்க
உலகிற்கு தகுதி இல்லை
பின் நாளில் உலகு
திருந்தினால் நான் கேட்பேன்

பட்டருக்காய் “அவ எறிஞ்சு”
பெளர்ணமியாய் நின்ற நிலா
வெட்டுண்டு வெட்டுண்டு
தேஞ்சது போல் என் கண்கள்
சொட்டும் தேயாது
வாழும் முடிவிலியாய்...

No comments:

Post a Comment