Thursday, 16 February 2012

இடைப்பட்ட காலம்..

இயன்ற வரை முயன்றாகி விட்டது
எங்கோ ஓர் துருவத்தில்
எடுத்தெறியும் மன நிலையில் நீ
இதற்கு மேலும்
இறங்கி வர முடியாமல் நான்

உனது பாதை
பணத்தாலும் உடலாலும்
கட்டப் பட்டிருக்கும் போது
மனத்தாலும் விசுவாசத்தாலுமான
எனது பாதை
வேடிக்கையாகத்தான்
இருக்கும் உனக்கு

மன முறிவுப் பயணத்தின்
நீண்ட தொலைவிற்கு
வந்தாயிற்று
இனித் திரும்ப முடியாது
இந்த நிலையில்..

இறுதியாக ஒருதடவை
நாம் வாழ்ந்த
கடற்கரைக்குப் போயிருந்தேன்
எல்லாம்
புதுப்புது முகங்கள்
எல்லைக் கற்கள் கூட
உடைந்த நிலையில்
வெளி நாட்டு மோகத்தின்
தலை தெறிப்பில்
இயல்பு சிதறிப்போய் இருந்தது
உண்மையில்
நிரம்பவே மாறிப் போயிருக்கிறது
கடற்கரையும்
உன்னைப் போல..

No comments:

Post a Comment