அப்பா..! என்னைப் பார்க்க வரமாட்டீர்களா..?
முடியாது மகனே..
ஏன் முடியாது..?
வந்தால் கொன்று விடுவார்கள்
ஏன் கொன்று விடுவார்கள்...?
நான் என் மக்களுக்காகப் பேசினேன்
ஏன் மக்களுக்காகப் பேசினீர்கள்..?
பறிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளுக்காக,
ஏன் உரிமைகள் பறிக்கப்பட்டன..?
சமமாக வாழ நினைத்தபோது
ஏன் தான் அப்ப பறிக்க விட்டீர்கள்..?
நாங்கள் இல்லை மகனே, எம் முன்னவர்கள் விட்ட பிழை
ஏன் அவர்கள் பிழை விட்டார்கள்..?
அவர்கள் மட்டும் பிழைப்பதற்காக,
அவர்கள் பிழைத்தார்களா..?
பெயரளவில் பிணமில்லை என்பதுவாய் பிழைத்தார்கள்
என்னவோ பிழைத்தார்கள் தானே..?
இதெல்லாம் ஒரு பிழைப்பா மகனே..
சரி, நீங்கள் மட்டுந்தானா கேட்டீர்கள்..?
இல்லை மகனே என் போல் பல்லாயிரம் பேர்..
ஆயின், என் போல் பல்லாயிரம் மகன்களுமா..?
ஆம் மகனே
ஒவ்வொரு மகனும் உன் போலவே
ஆயிரமாயிரம் கேள்விகளுடன்..
விடை கிடைக்குமா அப்பா..?
என்ன சொல்ல மகனே..!
விடுதலைப் போராட்டம் நெடிது தான்
ஆயினும்
என்னுடைய பிராத்தனை என்னவெனில்
உன்னுடைய காலத்திலும்
எங்கோ ஓர் மூலைக்குள்
என் போல் நீயும் என்புருகிக் கொண்டிருக்க
உன் மகனும்
விடைகளற்ற கேள்விகளுடன் மட்டும்
வளர்ந்து விடக்கூடாது என்பதே...
முடியாது மகனே..
ஏன் முடியாது..?
வந்தால் கொன்று விடுவார்கள்
ஏன் கொன்று விடுவார்கள்...?
நான் என் மக்களுக்காகப் பேசினேன்
ஏன் மக்களுக்காகப் பேசினீர்கள்..?
பறிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளுக்காக,
ஏன் உரிமைகள் பறிக்கப்பட்டன..?
சமமாக வாழ நினைத்தபோது
ஏன் தான் அப்ப பறிக்க விட்டீர்கள்..?
நாங்கள் இல்லை மகனே, எம் முன்னவர்கள் விட்ட பிழை
ஏன் அவர்கள் பிழை விட்டார்கள்..?
அவர்கள் மட்டும் பிழைப்பதற்காக,
அவர்கள் பிழைத்தார்களா..?
பெயரளவில் பிணமில்லை என்பதுவாய் பிழைத்தார்கள்
என்னவோ பிழைத்தார்கள் தானே..?
இதெல்லாம் ஒரு பிழைப்பா மகனே..
சரி, நீங்கள் மட்டுந்தானா கேட்டீர்கள்..?
இல்லை மகனே என் போல் பல்லாயிரம் பேர்..
ஆயின், என் போல் பல்லாயிரம் மகன்களுமா..?
ஆம் மகனே
ஒவ்வொரு மகனும் உன் போலவே
ஆயிரமாயிரம் கேள்விகளுடன்..
விடை கிடைக்குமா அப்பா..?
என்ன சொல்ல மகனே..!
விடுதலைப் போராட்டம் நெடிது தான்
ஆயினும்
என்னுடைய பிராத்தனை என்னவெனில்
உன்னுடைய காலத்திலும்
எங்கோ ஓர் மூலைக்குள்
என் போல் நீயும் என்புருகிக் கொண்டிருக்க
உன் மகனும்
விடைகளற்ற கேள்விகளுடன் மட்டும்
வளர்ந்து விடக்கூடாது என்பதே...
ஒருவித வலி வருகிறது..
ReplyDeleteநன்றி ஜீவானந்தம், ஈழத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் இப்படியான கதைகள் தான் எஞ்சிப்போய் இருக்கிறது..
Delete