Thursday 16 February 2012

நோய்க் காலை..

மஞ்சட் காமாலை
பிடித்துப் போய் அதிகாலை
நெஞ்சுச்சழி கக்கிச்
சூரியனும் எழுந்துவர

ரெத்தச் சோகை பிடித்தது
போற் தாமரையும்
சத்தில்லாச் சிவப்பாய்
மொட்டவிழ்ந்து இதழ்விரிக்க

ஊரே சேர்ந்து
ஒப்பாரி வைப்பது போல்
நேரே மரக்கொப்பில்
குயில்க் கூட்டம்
கூச்சலிட

காமக் கடுப்பால்
கட்டிழந்த உயிரொன்று
சாமம் முழுவதுவும்
கடித்தறுத்த முலைகள் எல்லாம்
தென்னங் குரும்பைகளாய்ச்
சிதறி மண் மீது
இன்னும் விசாரணைக்காய்
இயல்பறுந்து தவங்கிடக்க

அர்த்த மின்றி
இயற்கை எல்லாம்
ஆடி அடங்கிப்போய்
உனைப்பிரிந்த இரவெனக்கு
உயிர் போய் உயிர் வந்து
நினைவிழந்து விடிந்ததடி
நீண்டு...

No comments:

Post a Comment