Wednesday 8 February 2012

என்னுடைய சிரிப்புகள்..

யாழ் இந்துக்கல்லூரி
மைதானச் செம்பாட்டுள்
ஆழ்ந் தமிழ்ந்திருக்கின்ற
என்னுடைய நிசச்சிரிப்பே..!

உன்னை நான் கண்டேன்
உயிர் துளிர்த்தேன்..!
என்னுடலை
சன்னங்கள் துளைத்துச்
சா நெருங்கும் வேளையிலும்
உன் சிரிப்பை எண்ணித்தான்
உயிர்த்தெழுந்தேன்..

என் மகனே..!
கொஞ்சம் சிரி
குட்டி பாக்கோணும், ஏனென்றால்
இங்கே எவருமே
இதயத்தால் சிரிப்பதில்லை
பல்லால், உதட்டால்
பாவனையால் மட்டுந்தான்,

உன்னைப் போல்
நான் சிரித்து
உடை பட்டுத்திருந்தி விட்டேன்,
எனக்குள்ளே இப்பொழுது
ஏராளமாய் முகங்கள்..
வீட்டிற்குள், வெளியில்
விருந்தழைப்பில்,
காதலி முன்,
சாட்டிற்கு மதுக்கடையில்
என்பதுவாய் ஏராளம்..
அதற்கதற்குத் தக்கபடி
அச்சடித்த புன்னகையை
இடத்திற்கு ஏற்றபடி
இணைத்திடுவேன்
என் குருவே..!

கண்ணாடி முன் சிரித்தேன்
கண்றாவி சகிக்குதில்லை,
ஏன் முருகன்
ஆறு முகனானான்? என்பதுவும்
இப்போதுதான் எனக்கு
விளங்குதடா என்றாலும்
என்னுடைய சிறுவயசில்
எப்படி நான் சிரிச்சனெண்டு
இப்ப எனக்கொருக்காப்
பாக்கோணும், குருக் குட்டி ..!
இங்க வந்து சிரி
எங்க சிரி சிரி பாப்பம்...

No comments:

Post a Comment