Monday 20 February 2012

வாழ்வனடி..

கொஞ்சி சிரிச்சு
சொண்டால காது கவ்வி
நெஞ்சு மயிரில நீந்தி
விரலுக்கு சொடுக்கெடுத்து
கொஞ்சம் கொஞ்சமா
என்னை குடிச்சிட்டு
நீ போட்டாய்..

உனக்கென்ன இப்ப
புது வாழ்க்கை புதுப்பாஷை
எடுத்தெறிந்து வாழுகிற
இயல்புள்ள சமூகம்
இனி நான் உனக்கேன்..?
நடை பயில,

இப்பொழுதில்
ஆயிரம் கைத்தடிகள்
அறிமுகங்கள் கிடைச்சிருக்கும்
ஆனாலும் நானுனக்கு
ஒன்று சொல்வேன்
என்ரை செல்லம்!

’ஆரைத்தான் ஆர் உலகில்
அடைவமெண்டு நினைக்கேல்லை
எல்லாம் நடக்குமெண்டால்
காதலெண்டு எதுவும் இல்லை’

என்னோடு இருக்கையிலே
எனைப் பிடித்து நடக்கையிலே
உண்மையாத்தான் நீ
உயிர் வைத்தாய்
உடல் தொட்டாய்
என்னாயுள் போகு மட்டும் இது போதும்
வாழ்வனடி..!

No comments:

Post a Comment