செதுக்கிச் சீராக்கிய
அந்தச் சிறு மீசையின் ஓரத்தில்
தாய் நிலத்தின் நடுக்கம் குடியிருந்தது
அவன் தனது சொந்த மண்ணின்
வேர்களைத் தடவுகிறான்
ஆனால் அங்கே ஈரம் இல்லை
வங்கியின் இரும்புக் கதவுகளும்
மை படிந்த காகிதங்களும்
அவன் காற்றைத் திருடிச் சென்றிருந்தன.
வந்தேறிப் பறவைகளின் சிறகுகள்
அவன் வானத்தை மறைத்து நின்றன
அவன் காலடியில் இருந்த மண்
அவனுக்கே அந்நியமானதை எண்ணியபோது
அவனது நரம்புகளில்
அடக்கப்பட்ட ஆவேசத்தின் கசப்பு
கரும்பாறையெனத் திரண்டது.
கடல் அலைகளின் ஓசையை விட
அவர்களின் கூச்சல்கள்
தனியாக உரக்கக் கேட்கின்றன
வெள்ளித் திரைகளில் அவர்கள்
காயங்கள் மட்டும்
மினுமினுக்கும் வைரங்களாய்
விற்கப்படுகின்றன,
ஆனால் உலகப் போர்களில்
மடிந்து போன பெயரற்ற மனிதர்கள்
எங்கே போனார்கள் ?
மண்ணோடு மண்ணாய் போன
கோடிக்கணக்கான எளியவர்களின்
குருதி காய்ந்த சுவடுகள் எங்கே ?
இவர்கள் கொல்லப்பட்டதாய்
காட்டப்படும் கழிவிரக்கக் கணக்கில்
எண்ணிக்கையின் நீளம்
உண்மையானது தானா ?
அடிக்கப்பட்ட முத்திரைகளும்
அடகு வைக்கப்பட்ட துயரங்களும்
அவர்கள் வலியை மட்டும்
புனிதமாக்கிச் சிரிக்கின்றன
மற்றவர்களின் கண்ணீர்
உப்புக் கடலில் கலந்த
வெறும் நீர் தானா ?
அந்தப் பாதி மீசைக்காரன்
இவர்களை நான்
ஏன் கொன்றேனென
இனி வரும் உலகு அறிவதற்காக
மீதமிருந்த சிலரை விட்டுச் சென்றான்
ஏன் அவன் இவர்களை மட்டும்
மரணத்தின் பள்ளத்தாக்கிற்கு
துரத்தினானென்ற
கேள்விக்கான விடை..,
பாலஸ்தீனக் குழந்தைகளின்
அப்பாவிக் கண்களில்
திட்டமிட்ட போர்களால்
அழிக்கப்படும் ஏதுமறியா மக்களின்
வழிந்தோடும் குருதியில்
உலகின் ஒவ்வொரு மூலையிலும்
இடம்பெறும் சகல வகையான
சதிகளிலுமென
அறமற்ற அத்துணையிலும்
நிறைந்து போய்க் கிடக்கிறது
வரப்போகும் காலத்தின் கைகளில்
அது குருதி தோய்ந்த சாட்சியமாய்
இருக்கட்டும்..