தொடர் அடிகளால்
மூச்சுத் திணறிப் போயிருக்கும்
மக்களை நோக்கி
இதில் ஏதாவதொரு விரலை தொடுமாறு
கையை நீட்டியது அந்த மிருகம்
சென்றமுறைத் தெரிவுதான்
இன்றுவரையும் எம்மை இம்சை
செய்கின்றது என்றெண்ணி
அதற்கு முதல்முறை தெரிந்த விரலை
தொடுவதற்கு எண்ணிய போது
அதனைத் தெரிந்த ஐந்தாண்டுகளும்
பட்ட பாடு
அடிவயிற்றை முறுக்கி பிழிகிறது.
ஆயின் எந்த விரலைத் தொடுவது..?
எதைத் தொடினும்
விரல்கள் பிணைக்கப்பட்டிருக்கும்
கரம் யாருடையது?
எந்த மூளையின் உத்தரவுக்கு
அந்தக் கரம் இயங்கும்?
எமக்காய் இயங்கா மூளையின் கரங்கள்
எமக்காக இராது என்கின்ற போது
இதனுள் ஒன்றை எப்படித் தேர்வது?
இதற்குள் மட்டுமே உங்கள் தேர்வென
மிருகம் மூர்க்கமாய்
மிரட்டலாம், கொல்லலாம்
இவ்வளவு நாட்களாய்
எம்முடன் இருந்தாரா
என்றறியா எவரோ திடீரென
அந்த விரல்களை முறித்து
மக்களே
இதையெலாம் தாண்டும்
காலம் இது தான்
எழுக! என்றெழுவர்
அவருள் இருந்தே
நாம் தொடும் கரங்கள் உயரும்
நடக்கும்..
மூச்சுத் திணறிப் போயிருக்கும்
மக்களை நோக்கி
இதில் ஏதாவதொரு விரலை தொடுமாறு
கையை நீட்டியது அந்த மிருகம்
சென்றமுறைத் தெரிவுதான்
இன்றுவரையும் எம்மை இம்சை
செய்கின்றது என்றெண்ணி
அதற்கு முதல்முறை தெரிந்த விரலை
தொடுவதற்கு எண்ணிய போது
அதனைத் தெரிந்த ஐந்தாண்டுகளும்
பட்ட பாடு
அடிவயிற்றை முறுக்கி பிழிகிறது.
ஆயின் எந்த விரலைத் தொடுவது..?
எதைத் தொடினும்
விரல்கள் பிணைக்கப்பட்டிருக்கும்
கரம் யாருடையது?
எந்த மூளையின் உத்தரவுக்கு
அந்தக் கரம் இயங்கும்?
எமக்காய் இயங்கா மூளையின் கரங்கள்
எமக்காக இராது என்கின்ற போது
இதனுள் ஒன்றை எப்படித் தேர்வது?
இதற்குள் மட்டுமே உங்கள் தேர்வென
மிருகம் மூர்க்கமாய்
மிரட்டலாம், கொல்லலாம்
இவ்வளவு நாட்களாய்
எம்முடன் இருந்தாரா
என்றறியா எவரோ திடீரென
அந்த விரல்களை முறித்து
மக்களே
இதையெலாம் தாண்டும்
காலம் இது தான்
எழுக! என்றெழுவர்
அவருள் இருந்தே
நாம் தொடும் கரங்கள் உயரும்
நடக்கும்..