Monday 20 February 2012

விடை பெறும் வேளை..

உனது
தூரப் பயணமும்
நீண்ட பிரிவும்
கடைசி மணிக்கு வந்தவுடன்
என்று மில்லாத பதட்டம்,

இறுதி ஆட்டத்தில்
பனால்ரி அடிக்கத்
தயாராகும் போது
உள்ளங்கையாலும்
அடி வயிற்றிலிருந்தும்
அடிக்கடி ஏறுமே
ஒரு வகை மின்சாரம்..
அதே.. போல்
இப்பொழுதும்,

பிரமை இல்லை
வேகமாகச் சாப்பிடுகிறேன்
ரெத்தம் கசிய
நகம் கடிக்கிறேன்,
விரும்பாத பாடல்களை
விளங்காமற் கேட்கிறேன்
உன்னை
நான் எடுத்தெறிந்து பேசிய
நாட்களை எண்ணிக்
கவலைப் படுகிறேன்

எல்லாமே பரிசுத்தமாகி
தெளிந்து போய்
நீயாகி
அத்வைதம் உணரும் வேளை
விடை பெறுகிறாய்...

No comments:

Post a Comment