Saturday 29 May 2021

வறண்ட தாபம்..

 வானம் நீரை உறிஞ்சும் தாகம்

வாயோ வறண்டு கிடக்கிறது

தேனில் வண்டு திளைக்கும் மோகம் 

தீயே இதழாய் இருக்கிறது


காட்டிற் பாயும் ஆற்றின் தாபம்

காற்றே அணைக்க இருக்கிறது

கோட்டை அதிரும் யானைக்காமம் 

கோடை படர்ந்து வெறிக்கிறது 


பாறிவிழுந்தும் மரத்தின் தளிராய்

பாசம் இன்னும் துடிக்கிறது

ஊறிய மாநதி உருள மறுத்து

உள்ளே சுழலாய்க் கிடக்கிறது


உடலோ மனசைக் கேளேனென்று

உலுப்பி உலுப்பி வெடிக்கிறது

படத்தில் மட்டும் பார்த்துப் புழுங்கும்

பாட்டை பாட்டு வடிக்கிறது