Thursday 16 February 2012

பெருவாழ்வின் திருநாள்..

வானம் தான் பூப்பூத்த
வைரங்கள்தனைக் காட்டும்

தேன் ஏறி நிலவூற
நிலம் மஞ்சள் நிறமாகும்

மோனத்தில் காற்று
முழு ஞான வேதத்தை
தென்னங் கீற்றினிலே தெரிவிக்கும்

கோணத்தில்
கானங்கள் பாடிப் பூ அவிழும்
தன் மணத்தால்
ஞானங்கள் கொண்டுவரும்
நற் காற்றினுக்கு உயிர்ப் பூட்டும்

ஊனமாய்ப் போன
உளமெல்லாம் இவ்விரவில்
விழித்திருந்தால் விடை தெளிந்து
மகிழ்வொழுகும்

லேசாக
மழை பெய்து ஓய்ந்து
வருகின்ற இரவொன்றில்
குளை ஆடும் ஒலியோடு
குளிர் காற்றை உடலெங்கும்
அளையாது அதிராது
மரம் வீச, மனதெங்கும்
இளையாத உணர்வூறும்,
சுடர் ஞானம் மெருகேற
கிடையாத கவி ஒன்று
உருவாகும், இரவொன்றே
உலகின்ப பெரு வாழ்வின்
திரு நாளாம்..

No comments:

Post a Comment