Wednesday 8 February 2012

தவம்..

வருகையை எதிர்பார்த்து
வரங்கேள்
உருகு உருகு
உயிர் மணம் வரட்டும்
அந்தக் கருகலில் என்னுடைய
அங்கங்கள் எல்லாமே
கர்வம் மேலோங்க
பதப்பட்டுயிர் கொள்ளும்,

கண்ட உடன் கை பிசை
விரலோடு விரல் கோர்த்து
தெண்டித்துச் சோம்பல் முறி
வியர்க்கட்டும்,
கிட்ட நான் வந்தோண்ணை
பட்டு நில்
மார்பெழுந்து இறங்கட்டும்
பெரு மூச்சு கன்னத்தை
உரசிய படி

கை மீது கை பற்று
உள்ளங்கை நீர்க்கசிவு
என்னுடைய கணச் சூட்டில்
வெந்து மீள் உயிர்க்கட்டும்
கால் மெல்ல முட்டு என்
கர்வங்கள் எல்லாமே
உன்னுடைய காலடியில்
உயிர்ப் பிச்சை கேட்கட்டும்,
பருவத்தில் பார்
பாதி கூட நானில்லை
சொல்
உருவமேனும் நானா
உண்மையா...?

No comments:

Post a Comment