வியாழன், 16 பிப்ரவரி, 2012

மெய்ம்மை..

றோஜா இதழில் இருந்து
மிகக் கவனமாக
அழகாக
வழுக்கி விழும்
ஒரு மழைத்துளியைப் போல
உன் உதடுகள் வழியே
ஜென்ம மெடுக்கின்ற
ஒவ்வொரு சொற்களையும்
சிலிர்ப்போடு
இரை மீட்டுக் கொள்கிறேன்
தினமும்
நாம் சந்தித்தாலும்
எனக்குச் சொல்வதற்கென்றே
நீ வைத்திருக்கிற
ஆயிரம் புது விடயங்களைக்
கேட்கும் போதுதான்
புரிகிறது..
”பேச்சிற்கு எப்பவுமே
தீர்வு கிடையாது”

3 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சி ஐயா, இன்னும் நிறைய எழுதுங்கள்:)

    பதிலளிநீக்கு