Monday 4 May 2015

எவருக்கும் நோகாமல் அனுப்பு..

கண்கள் செருகிக் காட்சியும் மங்கிக்
கால் குளிர்ந்து
எண்ணம் மூச்சு எழுதல் திணறி
இறுக்கமுற்று
மண்ணை விட்டு நீங்கும் நேரம்
மனசு சொல்லும்
'உன்னாலெவரும் வாழ்வை இழந்து
உடைந்ததில்லை
உன்னுள் எந்தக் குற்ற உணர்வும்
இருந்ததில்லை'
என்னும் செய்தி செவியிற் கேட்க
எனை அனுப்பு
என்னைச் சிதைத்தும் நகர்த்திச் செலுத்தும்
என் முருகா..

No comments:

Post a Comment