Monday 4 May 2015

பறவையைப் பிரிந்த சிறகு..

எப்படி முகிலே நீ
என் வானந்தனை அகன்றாய்..?

எப்படித் தூரிகையே
என் வண்ணந்தனை மறந்தாய்..?

எப்படி நறுமணமே
இப் பூவின் இதழ் பிரிந்தாய்..?

எப்படி என் பேச்சே
இந்நாவை நீ கழன்றாய்..?

எப்படிச் சிறகே நீ
இடமறியா நடுவானில்
இப்பறவை உடல் விட்டு
எங்கேயோ பறந்து சென்றாய்..?

1 comment: