Monday 4 May 2015

கருவேப்பிலை..

உரமாக மட்டும் நீ
உண்டுயரும் செடியல்ல
கருவேப்பிலை நீ கறியல்ல என்றுபலர்
அறைந்தறைந்து சொல்லியுமேன்
அறியவில்லை மென் மனசே..?

வேண்டாமல் விலகுகின்ற கால்களையும்
நாய்க்குட்டி
விளையாட்டென எண்ணி
விருப்போடு பின் தொடரும்
பாலக உள்ளமேன் பெற்றாய்
பால் மனசே...?

என்புருகிக் கரைந்து
இரு கையும் நிறைய உன்னை
அப்படியே அள்ளி
அனைத்தயுமே கொடுத்து விட்டு
பாற்தாகம் வந்த கன்று
பசு முகத்தைப் பார்ப்பது போல்
ஏற்காத ஒன்றுக்காய்
ஏங்கிடுதல் ஏன் மனசே..?


1 comment: