Friday, 31 January 2025

தாயகத் தாகம்..

கானப்பறவை கதிரவன் நோக்கி

ஏங்கி நிற்கும் இயல்பினைப் போலவும்

மலைவாழ் யானை மரங்களை நோக்கி

தளைபட்டிருந்து தவிக்கும் தன்மையும்

நீர்வாழ் மீனினம் நெடுங்கடல் நினைந்து

தூண்டில் பட்டுத் துயருறும் போன்று

மண்ணில் வாழ்தல் மனம்கொள்வதிலையே

விண்ணைப் போல விரிந்த நெஞ்சினேன்

தாயக மீட்பில் தணியா வேட்கையேன்

பாடல்பாடிப் பரிதவிப்பேனே..

No comments:

Post a Comment