குடிசையின் கூரையில்
கொட்டும் மழைநீரில்
கரைகிறது இசை
தொழிலாளியின்
தழும்பேறிய கைகளில்
தவழ்கிறது அழகு
-
தெருவோர வாங்கிலில்
முதியவனின் முகத்தில்
மூழ்கியிருக்கிறது கவிதை
கூலித்தொழிலாளி
உடலில் வழியும்
வியர்வையில் மின்னுகிறது
சிற்பத்தின் ஒளி
-
உண்மை நிர்வாணமாய்
நடமாடும் தெருக்களில்
வறுமையின் வலியும்
வாழ்வின் அழகும்
வேறுவேறல்ல
-
நீ கவலைப்படாதே தோழா
அழகு எங்கும் இருக்கிறது
தொழிற்சாலை புகையிலும்
தொழிலாளி கண்ணீரிலும்
வியர்வை துளிகளிலும்
வீதியோர பிச்சைக்காரனின்
விரிசல் விழுந்த முகத்திலும்
-
பொய்யென நினைத்தது
மெய்யாய் மாறுகிறது
உண்மையென நம்பியது
பொய்யாய் உதிர்கிறது
அழகு மட்டும்
அப்படியே நிற்கிறது
முதலாளித்துவம்
விற்பனைப் பொருளாக்கிய
அழகு அல்ல இது
உழைக்கும் மக்களின்
உயிர்த்துடிப்பில் பிறந்த
உழைப்பின் உண்மை
-
கலையரங்கின் சுவர்களில்
காட்சிப்பொருளாய்
தொங்கும் ஓவியங்கள் அல்ல
கடின உழைப்பாளியின்
கரங்களில் மலரும்
காயங்களின் கவிதை
-
வர்க்க வேறுபாடற்ற
வருங்கால உலகின்
விடிவெள்ளி போல
வெளிச்சமாய் தெரிகிறது
அழகின் உண்மை
-
நாளை மலரும்
நம் கனவுகளின்
நித்திய இளமை போல
நிலைத்து நிற்கிறது
அழகின் மெய்மை
No comments:
Post a Comment