Friday 9 November 2018

உணர்த்தல்..

பூக்கள் நிறைந்த வனத்தையும்
இலைகள் உதிர்ந்த மரத்தையும்
பசுமை செழிக்கும் நிலத்தையும்
காய்ந்து வெடித்த குளத்தையும்
பார்வைக் கதிரில் பட்டுத் தெரியும்
உலகின் அத்தனை படைப்பையும்
எப்படிப் பார்ப்பது என்கிற படிப்பை
வாழ்க்கை அனுபவம் மட்டுமே அல்ல
ஓர் சிலவேளை
ஒற்றைக் கவிதையின் ஓரிரு வரிகளே
உணர்த்தி விட்டுச் செல்லுது நண்ப..

No comments:

Post a Comment