Friday 9 November 2018

எதுவுமில்லை கேளடா..

ஆண்டு என்பதேதடா
அடுத்த நாளும் ஏதடா
நீண்டு செல்லும் நினைவு என்னும்
நீளவீதி தன்னிலே
நேரம் காலம் அற்று வீழ
நித்தியம் பிறந்த பின்
மாண்டுபோதல் ஏதடா
மலர்ந்து தோன்றல் ஏதடா

வாழ்க்கை என்பதேதடா
வசந்தமென்பதேதடா
பாழும் காலம் பாதி நாளை
பற்றியே எரித்த பின்
மாளும் போதும் மனதுரைக்க
மனிதரற்றுப் போன பின்
நாளை என்பதேதடா
நடக்கும் என்பதேதடா..


No comments:

Post a Comment