Wednesday 2 May 2018

பறப்பெனும் பரவசம்..

அரவமற்ற அகண்ட பெருவெளி,
உயரமாய் ஒற்றை மரம்
காட்சி உறைந்து பேயறைந்து போயிருக்கிறது.
இதுதான் சூனியமோ என
எண்ணி விடுவதற்குள்
எங்கிருந்தோ ஓர் பறவை
சிறகை அடித்து வெளியுள் நுளைய
உறைந்திருந்த காட்சி உயிர்த்து
இருக்கிறாளா என
தெரியாமலிருந்த காதலியை
எதிர்பாராமல் கண்டுயிர்த்த பரவசமாய்
உலகின் அழகிய காட்சிகளில்
ஒன்றானது.

எல்லைகள் அற்று
எவருக்கும் பதிலுரைக்க தேவையற்று
எங்கும் பறக்க முடிகின்ற
கட்டற்ற சுதந்திரத்தின் அழகில்
எல்லாமே உயிர்த்து விடுகிறது.

பறப்பைப் போல் பேரழகு
பாரினிலே இல்லையடி..


No comments:

Post a Comment