Wednesday 18 April 2018

இப்படியாகத்தான் தேசங்கள்..

பாறை படர்ந்துளதா
ஓங்கி அடி
ஓங்கி இன்னுமோங்கி
வெட்டிரும்புக் கூர் வெம்மையேறி
கூர் நெழியும், பதறாதே
இன்னும் வெம்மையேற்றி
கூராக்கு
மீண்டும் ஓங்கியடி
உன் காலத்தில் உடைத்தல்
நிகழாமல் போகலாம்
சந்ததியிலொருவன்
கையேற்பான் அந்தக் கடமையை,

ஓர்மத் தினவில்
அவன் மீண்டும் மீண்டும் ஓங்க
ஓர் நாள் பாறை பிளக்கும்

உலகெங்கணுமே இப்படிதான் உருவானது
பாதையும், பயிருமென
நிலத்தை பண்படுத்தி
தேசங்கள்.



1 comment:

  1. அருமையான வரிகள்
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete