குளிரின் அம்புக் கதிர் உடலை
குத்தித் துளைக்கா திருக்கவென
அறையுள் ஏகும் காற்று வழி
அனைத்தும் இறுக்கி அடைத்து விட்டு
பஞ்சுப் போர்வைக் குளிருக்குள்
பதுங்கிப் படுத்து உடல் மூட
நெஞ்சாங்குழியின் அடியிருந்து
நீளும் மூச்சாய் நாசி வழி
மண்ணின் மணமும் நினைவுகளும்
மதர்த்து எழுந்து அறை நிறைந்து
எங்கும் போக முடியாமல்
இறுகி அடர்ந்து என் கனவுள்
நினைவாய் ஏற மண்ணவளே
நீளும் பிரிவுக் காதலெனுள்
உன்னில் ஓடி விளையாடி
உருண்டு திரிந்து உன்னுடலின்
பொன்னின் துகள்களெனில் ஒட்ட
போற்ற வாழ்ந்த வாழ்க்கையினை
எண்ணக் கண்ணின் நரம்பெல்லாம்
இதயச் சிவப்பாய் மாறுதடி!
உன்னில் பிறந்து உனில் வளர்ந்து
ஒன்றாய்க் குலவிக் களிக்கையிலே
உந்தன் காதல் புரியவில்லை
ஒன்றும் பெரிதாய்த் தெரியவில்லை
உன்னை உரைந்து வானூர்த்தி
உயரப் பறக்கத் தொடங்கையிலே
ஜன்னல் வழியால் உனைப் பார்க்க
யாரை நோவேன்? உன் உருவம்
சின்னக் குட்டிப் பொருளாக
சிதறச் சிதற என் அன்பே
உன்னைப் பிரியும் நினைப்பெனக்கு
உறுத்திக் கொல்லத் தொடங்கிற்று
தூரத் தூரப் போகத்தான்
தொடுமோ அன்பு துளைத்திடுமோ!
பார்க்க ஏலாப் பொழுதிற்தான்
பாசம் மேலும் வளர்ந்திடுமோ!
தேசப் பளிங்கே திசை முகமே
தெவிட்டாக் காதற் தேன் குடமே
உன்னோடிருந்தே உன் மடியில்
உயிரை விடவே நான் நினைத்தேன்
என்னால் முடிந்த மட்டிலெல்லாம்
இதற்காய் முயன்று நானுழைத்தேன்
வேசைக் காலம் விளங்காமல்
விலக்கி இழுத்து எனைப் பிரித்து
ஓசை அற்ற ஒரு காட்டில்
உறையும் பனியில் எறிந்துளது
உழன்று திரிந்து இம்மண்ணில்
உயர வளர்ந்து நிமிர்ந்தாலும்
உந்தன் மடியின் ஓர் கரையில்
ஒதுங்கிச் செடியாய் வாழுகிற
சொந்தச் சுவையின் கொடுப்பனவு
வந்த இடத்தில் வருமோடி?
என்றோ ஒரு நாள் எனக்கான
இயங்கும் தளமும் உருவாக
காட்டை வானைக் கிழித்தோடி
கடலை மேவி வருவேன் நான்
போகும் போதில் சிற்சிறிதாய்
போனாய் மீண்டு வரும் போதோ
அகன்று விரிந்து அழகாக
அணைப்பாய் என்னை,ஏறுகையில்
ஓடு தளத்தின் இரு கரையும்
ஓடி என்னை எதிர்த் திசையில்
தாண்டிப் போன மரங்களெல்லாம்
மீண்டும் இறங்கி வரும் போது
கடைசிக் காட்சி தந்தமரம்
கையைக் காட்டும் முதல் நின்று
உன்னில் உரஞ்சிப் பொறி பறக்க
ஓடி இறங்கும் நாளதனை
எண்ணி எண்ணி ஒவ்வொன்றாய்
இழுத்து மூச்சை விடுகின்றேன்
கனவின் நினைவுக் கண்களுக்குள்
நினைவின் கனவு நீள்கிறது...
குத்தித் துளைக்கா திருக்கவென
அறையுள் ஏகும் காற்று வழி
அனைத்தும் இறுக்கி அடைத்து விட்டு
பஞ்சுப் போர்வைக் குளிருக்குள்
பதுங்கிப் படுத்து உடல் மூட
நெஞ்சாங்குழியின் அடியிருந்து
நீளும் மூச்சாய் நாசி வழி
மண்ணின் மணமும் நினைவுகளும்
மதர்த்து எழுந்து அறை நிறைந்து
எங்கும் போக முடியாமல்
இறுகி அடர்ந்து என் கனவுள்
நினைவாய் ஏற மண்ணவளே
நீளும் பிரிவுக் காதலெனுள்
உன்னில் ஓடி விளையாடி
உருண்டு திரிந்து உன்னுடலின்
பொன்னின் துகள்களெனில் ஒட்ட
போற்ற வாழ்ந்த வாழ்க்கையினை
எண்ணக் கண்ணின் நரம்பெல்லாம்
இதயச் சிவப்பாய் மாறுதடி!
உன்னில் பிறந்து உனில் வளர்ந்து
ஒன்றாய்க் குலவிக் களிக்கையிலே
உந்தன் காதல் புரியவில்லை
ஒன்றும் பெரிதாய்த் தெரியவில்லை
உன்னை உரைந்து வானூர்த்தி
உயரப் பறக்கத் தொடங்கையிலே
ஜன்னல் வழியால் உனைப் பார்க்க
யாரை நோவேன்? உன் உருவம்
சின்னக் குட்டிப் பொருளாக
சிதறச் சிதற என் அன்பே
உன்னைப் பிரியும் நினைப்பெனக்கு
உறுத்திக் கொல்லத் தொடங்கிற்று
தூரத் தூரப் போகத்தான்
தொடுமோ அன்பு துளைத்திடுமோ!
பார்க்க ஏலாப் பொழுதிற்தான்
பாசம் மேலும் வளர்ந்திடுமோ!
தேசப் பளிங்கே திசை முகமே
தெவிட்டாக் காதற் தேன் குடமே
உன்னோடிருந்தே உன் மடியில்
உயிரை விடவே நான் நினைத்தேன்
என்னால் முடிந்த மட்டிலெல்லாம்
இதற்காய் முயன்று நானுழைத்தேன்
வேசைக் காலம் விளங்காமல்
விலக்கி இழுத்து எனைப் பிரித்து
ஓசை அற்ற ஒரு காட்டில்
உறையும் பனியில் எறிந்துளது
உழன்று திரிந்து இம்மண்ணில்
உயர வளர்ந்து நிமிர்ந்தாலும்
உந்தன் மடியின் ஓர் கரையில்
ஒதுங்கிச் செடியாய் வாழுகிற
சொந்தச் சுவையின் கொடுப்பனவு
வந்த இடத்தில் வருமோடி?
என்றோ ஒரு நாள் எனக்கான
இயங்கும் தளமும் உருவாக
காட்டை வானைக் கிழித்தோடி
கடலை மேவி வருவேன் நான்
போகும் போதில் சிற்சிறிதாய்
போனாய் மீண்டு வரும் போதோ
அகன்று விரிந்து அழகாக
அணைப்பாய் என்னை,ஏறுகையில்
ஓடு தளத்தின் இரு கரையும்
ஓடி என்னை எதிர்த் திசையில்
தாண்டிப் போன மரங்களெல்லாம்
மீண்டும் இறங்கி வரும் போது
கடைசிக் காட்சி தந்தமரம்
கையைக் காட்டும் முதல் நின்று
உன்னில் உரஞ்சிப் பொறி பறக்க
ஓடி இறங்கும் நாளதனை
எண்ணி எண்ணி ஒவ்வொன்றாய்
இழுத்து மூச்சை விடுகின்றேன்
கனவின் நினைவுக் கண்களுக்குள்
நினைவின் கனவு நீள்கிறது...
No comments:
Post a Comment