யாணர்கொள் புலம்பொழில் அகன்றிலை மரத்தின்
வேணிலங் கொண்ட வெம்முகை அவிழ
வான்பொழி தண்துளி வரைப்புறத் தோய்ந்து
கானம் கமழும் கார்வரு காலை
மலையமா தவத்தோன் மாமொழி போல
நிலையின் நீடிய நிகரில் தமிழே
-
யாழின் நரம்பிசை எழுமொலி போல
வாழிய நின்மொழி வளம்பல தந்தே
தென்புல வாணர் தெளிந்துரை கேட்டன
தேன்பொதி மென்மொழி திகழ்வுறப் புணர்த்தன
ஐங்குறு நூற்றின் அகத்திணை மாண்பும்
பைங்கிளி மொழியும் பாடிடப் பதிந்தன
அகலினும் நெகிழா அரும்பொருள் காப்பாய்
இகலினும் குன்றா இயல்பினை உடையாய்
-
மாறிவரு காலத்து ஆறுபல கண்டும்
வேறுபட்டு நில்லா நின்னிழல் தோன்றி
மணிவண்டு மொய்க்கும் மலிபெயல் ஊதையும்
அணிகொள் பூந்தார் அரும்பா நாற்றமும்
நின்னோ டுறழ்வில தமிழின் தொன்மையே
-
ஓங்கிய பெருங்கடல் உலவா தாயினும்
நீங்கா நின்பெயர் நிலைபெற்ற தன்றே
இன்னகம் பெறுக இதுகேள் பாண
உன்னுதல் தவிரா ஒண்டமிழ் ஒலியே..
No comments:
Post a Comment