காலம் என் இதயத்தை
கறுப்பு ரோஜாவாக்கியது
ஒவ்வொரு இதழும்
வாடிய நம்பிக்கைகள்
இருட் கூடாரத்தில்
நான் ஒரு சிறைப்பறவை
என் இறக்கைகள்
உதிர்ந்து போன பின்னும்
பறக்க முயல்கிறேன்
வானம் என்னை நிராகரிக்கிறது
-
அவள் மௌனம் ஒரு கத்தி
என் நெஞ்சை அறுக்கும் கூர்மை
ஆனால் இந்த வலி எனக்கு பழக்கமானது
வேதனை என் இரத்தத்தில் கலந்த விடம்
நான் அதைப் பருகி பருகி வளர்ந்தேன்
இப்போது அது என் உயிர்மூச்சு
-
‘ஒன்றுமில்லை’ என்பாள்
ஆனால் அந்த வார்த்தைகள்
பொய்களின் புதைகுழி
நான் அதில் விழுந்து கொண்டிருக்கிறேன்
எப்போதும் வீழவே செய்கிறேன்
கீழே எங்கும் இருள்தான்
மேலே அவள் முகம் ஒரு மங்கிய நிலவு
-
வரக்கூடுமென காத்திருந்து காத்திருந்தே
என் இளமை கருகி மடிந்தது
ஒவ்வொரு காலையும் ஒரு சவப்பெட்டி
நான் அதில் என் கனவுகளை புதைக்கிறேன்
ஆனால் அவை இறக்க மறுக்கின்றன
என் நினைவுகளில்
அழுகிக் கொண்டிருக்கின்றன
-
இன்னொரு நிழல்
அவள் கண்களில் நடனமாடுகிறது
அந்த நிழலுக்கும் நானே சாட்சி
என் மௌனமே என் சாபம்
ஒவ்வொரு அசைவிலும் நான் சிதைகிறேன்
-
இப்போது நான் ஒரு வெற்றுக் கூடு
காலம் என்னை வெறுமையாக்கியது
என் எலும்புகளில் காற்று ஊளையிடுகிறது
ஆனால் இந்த வெற்றிடத்திலும்
எதையோ இன்னமும் நம்புகிறேன்
காத்திருக்கிறேன்..
No comments:
Post a Comment