நெடுங்கடல் கடந்த நீள்நிலம் பிரிந்தும்
வெற்பகம் தாண்டிய வேறுபட்ட தேயமும்
மன்னர் வகுத்த மறைமுறை தடுப்பினும்
கானல் நீர்போல் காட்சியில் கலந்து
மாலை வேளையில் மனத்தொடு முயங்கி
கனவினில் கூடிக் களிநடம் புரிந்து
காமம் கனன்று கருத்தொடு பிணைந்து
எந்நாள் கூடும் எனக்காத் திருந்தும்
பருவம் பலவும் பயின்று தேய்ந்தபின்
ஒருநாள் கூடல் உறுதியென் றுணர்ந்து
தனித்தனி ஊரில் தளராது காத்து
நினைத்தொறும் நெஞ்சம் நெகிழ்ந்துருகி நிற்கும்
காலம் என்னும் கடல்மிசை மிதந்து
ஊழியும் உலகும் ஒருங்குடன் கழியினும்
மாறா அன்பின் மறுபிறப் பெய்தி
மலரும் பொழுதின் மணம்போல் கமழும்
காதற் பயிரை கசிந்துயிர்த் திருந்தே..
No comments:
Post a Comment