நான் உனக்குச் சொல்கிறேன்
உன் இதயத்தின் கதவுகளைத் திற
கடலின் அலைகள் போல
உன் கைகள் திறக்கட்டும்
வானத்தின் விரிவு போல
உன் விழிகள் விரியட்டும்.
காத்திரு
நீ காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும்
புதிய வசந்தம் பிறக்கிறது.
இப்போது
தென்றலில் நடனமாடும் மரங்களைப் போல
உன் உடல் அசையட்டும்
கடற்கரையில் உடையும்
அலைகளின் முத்தங்கள் போல
உன் தொடுகை இருக்கட்டும்
பௌர்ணமி இரவில்
கடலின் மேல் பரவும் வெள்ளி வெளிச்சம் போல
உன் அன்பு பரவட்டும்
கடைசியாக,
விடிவெள்ளி விடியலை வரவேற்பது போல
இருளை விட்டு விலகுவதற்கான
பாடத்தை கற்றுக்கொள்
இதுதான் காதல்
வாழ்வின் நிலையற்ற தன்மையில்
நிலைத்திருக்கும் ஒரே நித்தியம்..
No comments:
Post a Comment