திங்கள், 10 பிப்ரவரி, 2025

ஒப்பாரும் இல்லான்..

கடல்சூழ் வையம் கண்புகழ் வெற்றி

வேல்வலம் கொண்டு வெருவரத் தாக்கி

தென்புலம் காக்கும் திறல்மிகு ஏறே

சிறு குழுவாளர் சீற்றமும் பொறுத்து

அமர்முனை நின்ற ஆண்மையன் தனக்கு

பகை கையிற்சிக்கா பைந்நஞ்சணிந்து

களம்புகு போரில் கணை கையேந்தி

உயிர்க்கொடை தந்த ஒருமகன் அல்லனோ

-

குன்றினை நுண்கோல் குத்திடல் போல

புறத்தோர் வந்து புகல்தல் இன்றே

பெருங்கடல் நீர்மேல் பேர்நடை போல

மாற்றோர் வந்து மலிதல் ஆமோ

-

மண்காக்கும் வேங்கை மறத்தமிழ் வேந்தன்

கண்துஞ்சா நெஞ்சின் களிற்றுமேல் வீரன்

அயல்புலத் தாரும் அடங்குவர் அவற்கே

தமிழ்நிலம் காத்த தகைமிகு மறவன்

ஒப்பிலா முனைவன் உயிரென நின்பான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக