முந்நீர் நீந்தி முழுமலை யிறந்து
நீருறை யாகும் பனிப்படு துருத்தியில்
உயவுமரப் பட்டையாய் உலர்ந்ததென் யாக்கை
இழப்பதற் கினியோர் எஞ்சிய தில்லை
அறுத்த வேரொன் றடிமண் விழைந்து
துடிக்குமாப் போல் தொல்வள நாட்டில்
செந்நிலந் தழுவியென் சில்லுயிர் விளிய
நல்குவை யாயின் நன்றென நலியும்
எல்லுழந் தழுங்கிய என்னுயிர் நிலையே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக