Wednesday, 12 March 2025

மங்கிய பனிப்புகையாய்..

காலி செய்த வீடு

சுவரில் தொங்கும் படத்தில்

காற்று அசைக்கும் முகம்

-

இலை உதிர்ந்த மரம்

கிளைகளில் தங்கும்

மழையின் கண்ணீர்

-

அலை கொண்டு செல்கிறது

கரையில் எழுதிய

குழந்தையின் பெயர்

-

நெருப்பின் சாம்பலில்

மீண்டும் எழுகிறது

காற்றின் நினைவு

-

கண்ணாடி உடைந்தது

துண்டுகளில் தெரிகிறது

ஒரே நிலவு

No comments:

Post a Comment