Wednesday 8 May 2019

நேருமிது என்று அறிந்தாயோ..

அள்ளி இரு கையில்
அன்பை முழுதாக
கொள்ளு பிடியென்று
கொடுத்தாலும்
உள்ள மனம் பூட்டி
ஒதுங்கி எனைநீங்கி
தள்ளி மெதுவாக
தவிர்ப்பாயோ?

சேர நிலம் வந்து
சேரு எனையென்று
ஈர மொழி பேசி
எனை யுந்தி
ஆறு கடலோடு
ஆவலொடு கூட
ஊறி வரும் போது
உதைவாயோ?

நேருமிது என்று
நெஞ்சின் அடிஉள்ளின்
ஓர அறையோரம்
உரப்பாக
கூறும் அசரீரி
கொட்டும் உடுக்கொன்று
ஏறிச் செவிகேட்டு
எறிந்தாயோ..


2 comments: