Tuesday 21 November 2017

கரையேறுமெங்கள் கனவு

வாழ்வினை, உயிரை
வழித்தெடுத் தெமது
வாழ்நிலம் செழிப்பதற்கென்று
வழங்கிய எங்களின் மானமாவீரரே
வயலெலாம் உங்களின் கனவு
வண்டலுள் உரமாய் வாழுது, ஓர்நாள்
வளர்ந்தெழும் எங்களின் பயிர்கள்
உண்டெழும் உம்மை ஊட்டமாய்,
விடுதலை உயிர்பெறும்
தமிழ் நிலம் மலரும்.

சாவெனத் தெரிந்தும் சந்ததி நினைந்து
சரித்திரமானவர் உழைப்பு
சாவென எம்மை சரித்த இவ்வுலகின்
சக்திகள் நலனினைத் தாண்டி
ஆவென அவரே அதிசயிக்கும்படி
அத்துணை அர்த்தமாய் மலரும்

அரசியற் பலந்தாண்டி ஆன்மபலம் வெல்லும்
கரையேறு மெங்களின் கனவு..

- திரு

No comments:

Post a Comment