Friday 3 August 2012

உயிர் வினா..

நிலம் பிளந்தூறுகின்ற
நீரூற்றைப் போல, மாறும்
உளம் இருக்கும் உடலினுள்ளே
ஊறுவதா உயிர் அருவம்?

வீசலுறும் விந்தோடி
விளை சூலில் நுளைந்த பின் தான்
கேசமுறும் உயிர் முளையும் தோன்றுதென்றால்,
உயிரென்ன
இரெண்டின் சேர்க்கையினால்
எழுகின்ற ஒன்றா? இல்லை
உயிர் தான் விந்தாமோ? உடல் சூலோ?
ஆயின்
ஒரு கோடி உயிர் கொன்றா
உயிர் ஒன்று வருகிறது?

மின்சாரம் உயிர் என்றால்
மின் கடத்தி உடல் என்றால்
மின்குமிழ் தான் ஐம்புலனும்
மெய்ம்மைதான், அதைப்பாய்ச்சும்
ஆழியினைப் போடுவதார்?
அந்த விரல் எந்தவிரல்?

இப்படியாய்
எந்தப் பதிலும்  எதுமுயன்றும் புரியாத
வந்த வழி தெரியாத வாழ்வில் வீணாக
நொந்து குமைவானேன்? நொடிவானேன்?
பிறப்பென்னும்
விந்தை உதிப்பெண்ணி விய..

No comments:

Post a Comment