Friday 7 June 2019

இப்படியாய் தமிழன் இருப்பு..

பறவையில்லா மாந்தோப்பு
பச்சையற்ற மேய்ச்சல் நிலம்
தேனியற்ற பூஞ்சோலை
நீர்மையற்ற வாழையடி
தலை கருகும் பனைமரங்கள்
தடமழிந்து போன நதி
புராணக் கதையாகும்
பொன்வண்டு, மின்மினிகள்
தம்பளப் பூச்சியற்ற
தண்பனியின் உதிகாலை
தான் வாழ்ந்த வழியெங்கும்
தடைகள், தெரிவின்றி
முட்டிச் சாகின்ற
முரட்டானைக் கூட்டங்கள்
மற்றும் தமிழரும்..


1 comment: