Tuesday 11 December 2018

அதன் பிறகு..

அதன் பிறகு
குருத்து முளை விட்டு
பிஞ்சு பிடிக்கத் தொடங்கியது
மிடுக்கான அடர் பச்சையாகி
இலை அகன்று
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
பழுத்து பொன் நிறமாகி
ஒவ்வொன்றாய் அவிழ்ந்து விழ
வார்த்தைகளில் வடிக்கவொண்ணா
அத்துணை வெறுமையாய்,

ஒவ்வோர் பொற்காலத்தின் பின்னும்
இருண்ட காலமொன்று
இருந்தே தான் ஆகுமென்பதன்
வடிவந்தான் இஃதோ..?

மேனி தளதளப்பாய் மினுங்க
மீண்டும் குருத்து, அதே வெறுமை.
சுழல்வது தெரிகிறது

இப்படி எத்தனை சுழற்சிகள் போயின,
கடந்து செல்லும் ஒவ்வோர்
கணத்தின் நிழலிலும்
அதன் பிறகான இங்கிதக் குளிர்மையை
இன்றுவரை என்னால்
எண்ணவே முடிவதில்லை..

No comments:

Post a Comment