Wednesday 26 June 2013

அந்தராத்மா..

எல்லாம் முடிந்துவிட்டதென்று
தெரிந்த பின்னர்
இத்தனை வருடப் போராட்டத்தின்
இறுதி ஆசையாக
குண்டுகளால் துளைக்கப்பட்டு
இந்த மண்ணில்
தன்னுடலம் விழும் போது
வாழ்ந்த மண்ணை
இரு கைகளுக்குள்ளும்
ஒவ்வொரு பிடி இறுகப்பற்றிய படியும்
அகலக் கண் விரித்து
ஆசை தீர
தன் தேசத்தின் வானத்தைப் பார்த்தபடியும்
வீரச்சாவு நிகழ
அவன் விரும்பியிருந்தான்

ஆனால்
கைகள் பின்புறமாகவும்
கண்கள் துணியினாலும்
இறுக்கமாகக் கட்டப்பட்ட படி
கடைசி வரை
அவன் ஆசைகள் எதுவும்
நடக்கவே இல்லை..




2 comments:

  1. என்ன செய்வது ? தனி மனிதத் தியாகங்கள் தாம் ஒரு சமுதாயத்தின் அஸ்திவாரங்கள் ஆகவேண்டும் என்று விதி எழுதிவைத்திருக்கிறதே! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete