ஆயிரம் பெண்கள் வீதியில் நடக்கிறார்கள்
மனதிற்கு நெருக்கமானவள் மட்டும்
அவ்வளவு அழகாய்த் தெரிகிறாள்
-
காதல் என்பது அழகை உருவாக்கும் சிற்பி,
அது சாதாரண முகத்தில்
விண்மீன்களை விதைக்கிறது,
கூந்தலில் கடலின் அலைகளை பின்னுகிறது
குரலில் பறவைகளின் கீதங்களை கலக்கிறது
-
அவள் அவ்வளவெல்லாம் அழகி அல்லவென
உலகம் சொல்லலாம்
ஆனால் என் காதல் பதில் சொல்கிறது
அழகு என்பது என் பார்வையில் பிறந்து
காதலில் வளர்வது
-
மழையில் நனைந்த பூமி அழகானது,
ஏனெனில் அது வானத்தின் முத்தங்களை
ஏற்றுக்கொண்டது.
-
அதுபோல் என் காதலில் நனைந்த பெண்
அழகின் இராணியாகிறாள்
காதல் கொண்ட கண்கள் பொய் சொல்வதில்லை,
உண்மை தான் தோழி
அழகிகள் எல்லாம் காதலிக்கப் படுவதில்லை
ஆனால்
காதலிக்கப்படுகின்ற ஒவ்வொருத்தியுமே
அழகிதான்..