Monday, 14 July 2025

வீரச்சாவு..

ஆனாலும் சாகும் வரை

சண்டையிட்டார்கள்

கடைசித் தோட்டா தீரும் வரை,

-

மரணம் என்பது

பார்த்துப் பார்த்துப் பழகிப்போன

பழைய நண்பன்

எப்போதும் விலகாமல்

பக்கத்தில் நிழலாக வந்திருக்கிறான்

-

அதனாற் தான்

அவர்களின் மரணம் என்பது

அவமானத்தின் மரணமாக இல்லாமல்

வீர மரணமாக இருந்தது

-

கைப்பிடியளவு காற்று

அவிழ்ந்து கரையும் வரை

கைவிடாத கொள்கையை

பக்கத்தில் இருந்து பார்த்த மரணம்

விடைபெறும் அவர் கதையை

வெறும் சாவாக விடாமல்

வீரச்சாவு என்றழைத்தது

-

பாவிகள் நமக்கந்தப்

பாக்கியம் இல்லை

——

சித்தம் கலங்கிக் சிதைந்து

ஆளாளை நோக்கி

அவரவர் அறிவறிந்த

ஒற்று அமைப்புகளின்

பெயர் சொல்லிச் சொல்லி

இற்றுப் போய்ப் புழுத்து

இறப்பதா எமது விதி.. ?

No comments:

Post a Comment