ஆனாலும் சாகும் வரை
சண்டையிட்டார்கள்
கடைசித் தோட்டா தீரும் வரை,
-
மரணம் என்பது
பார்த்துப் பார்த்துப் பழகிப்போன
பழைய நண்பன்
எப்போதும் விலகாமல்
பக்கத்தில் நிழலாக வந்திருக்கிறான்
-
அதனாற் தான்
அவர்களின் மரணம் என்பது
அவமானத்தின் மரணமாக இல்லாமல்
வீர மரணமாக இருந்தது
-
கைப்பிடியளவு காற்று
அவிழ்ந்து கரையும் வரை
கைவிடாத கொள்கையை
பக்கத்தில் இருந்து பார்த்த மரணம்
விடைபெறும் அவர் கதையை
வெறும் சாவாக விடாமல்
வீரச்சாவு என்றழைத்தது
-
பாவிகள் நமக்கந்தப்
பாக்கியம் இல்லை
——
சித்தம் கலங்கிக் சிதைந்து
ஆளாளை நோக்கி
அவரவர் அறிவறிந்த
ஒற்று அமைப்புகளின்
பெயர் சொல்லிச் சொல்லி
இற்றுப் போய்ப் புழுத்து
இறப்பதா எமது விதி.. ?
No comments:
Post a Comment