அன்பாகப் பேசிக் கொண்டிருந்த
அந்த உதடுகள்
திடீரென்று கல்லாகிவிட்டன
உறைந்த குளிர்காற்றைப் போல
மௌனம் எங்களுக்கிடையே வந்து அமர்ந்தது
-
நான் ஏனென்று கேட்கவில்லை
அவளும் தான்,
தூரமான, வெறுமையான, அழகான
மௌனம் எம்மிடையே
விண்மீனைப் போல ஒளிர்ந்தது
-
பழகிய இத்தனை ஆண்டுகளும்
மழையைப் போல
என் முகத்தில் வீழ்ந்தன,
ஒவ்வொரு துளியிலும்
காத்திருப்பின் கனமும்
நினைவுகளும்,
இப்போது அவை அனைத்தும்
மேகம் போல கலைந்து செல்கின்றன
அன்பு இவ்வளவு குறுகியதா
மறதி இவ்வளவு நீளமானதா..
-
காதல் என்பது பறவையைப் போன்றது
வந்தபோது தெரியவில்லை
போகிறபோது தெரிகிறது
-
அவளுடைய மௌனம் என்னைச் சுற்றி
பரந்த கடலைப் போல விரிந்தது
அலைகள் இல்லாத கடல்,
வானத்தில் மறைந்த விண்மீன் போல
தூரத்தில் இருப்பதாய்த் தோன்றுகிறது
இன்னும் ஒளிவீசுவதாய் தெரிகிறது
ஆனால் அது எங்குமில்லை
-
இரவின் காற்று எங்கள் வீட்டைச் சுற்றி
தனிமையின் பாடல்களைப் பாடுகிறது
நாம் இல்லாத இடங்களில்
இருந்த அடையாளம்
மௌனம் பேசும் இடமெல்லாம்
நாம் பேசிய வார்த்தைகளின்
எதிரொலி,
-
காதல் மேகம் போன்றது
வரும்போது பூமியை நனைக்கிறது
போகும்போது
வானத்தை வெறுமையாக்குகிறது..
-திரு
No comments:
Post a Comment