Thursday 1 May 2014

யாசகம்..

விரக்திப் பாலைவன வெம்மை
நிம்மதியை
துரத்தி அலைக்கழித்து
துவண்டுவிழத் துவண்டு விழ
அரக்கத்தனமாக அடிக்க
இதன்மேலும்
இரக்கங்காட்டாயோ எனக்கேட்டும்
பதிலின்றேல்
அறுத்தென்னைக் கொல்வதற்கு ஆணையிடு
அல்லவெனில்
கருக்கென் உணர்வெல்லாம்
களி வாழ்வை எதிர்பாரா
பருப்பொருளாயென்னைப் படை..

No comments:

Post a Comment