வியாழன், 1 மே, 2014

யாசகம்..

விரக்திப் பாலைவன வெம்மை
நிம்மதியை
துரத்தி அலைக்கழித்து
துவண்டுவிழத் துவண்டு விழ
அரக்கத்தனமாக அடிக்க
இதன்மேலும்
இரக்கங்காட்டாயோ எனக்கேட்டும்
பதிலின்றேல்
அறுத்தென்னைக் கொல்வதற்கு ஆணையிடு
அல்லவெனில்
கருக்கென் உணர்வெல்லாம்
களி வாழ்வை எதிர்பாரா
பருப்பொருளாயென்னைப் படை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக