Thursday 1 May 2014

தனித்த கோடை

என்றாவதொரு நாள்
வசந்தம் வருமென்ற நம்பிக்கையில்
பருவம் மாறாத பல கோடைகளை
தனியனாகத் தாக்குப் பிடித்த அந்த மரத்துக்கு
இனியொருபோதும் உனக்கு வசந்தமில்லை
வறள் காற்று நிறைந்த
தனித்த கோடைதானெனும் செய்தியை
காற்றுச் சொல்லிப் போனது,
வேரறுந்து வீழும் வரத்தை இறைஞ்சுவதன்றி
வேறென்ன செய்யும் மரம்..

No comments:

Post a Comment