சனி, 22 ஜூலை, 2023

நினைவின் துமி..

அரைத்தூக்கத்தில் புரள்கின்ற 
ஆழ்அமைதி இரவில் 
தூரத்தில்  எங்கோ கேட்கின்ற 
ஒற்றைப் பறவையின் குரலுக்கு 
திடுக்குற்றுப் பார்க்கிறது 
மனசு, 

உறவி ஊர்ந்தூர்ந்து 
உண்டான தடமாய் 
மனப்பாறைமேல் 
நினைவுகள் 
ஊர்ந்த தடங்கள் 
இன்னும் அப்படியே  சுவடுகளாய், 

உதட்டைப் பிரிக்காமல் 
வாய் சிரிக்கிறது 
ஏனோ நீரூறி 
கண்கள் துமிக்கிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக