Thursday 26 November 2020

எம் இறைவோரே..

 போற்றியெம் வாழ்முதலாகிய புதல்வீர்

புலரும், பெருமுயிற் கொடைகொண்டு 

ஊற்றினீர் விடிவிற்கு உம் வாழ்வை 

ஒருக்கிலும் மறந்திடோம், இதன் பதிலாய் 

தோற்கிலோம் என்கிற தினவுடை வாக்கினை 

தூயரே வைக்கிறோம் உம் முன்னால் 

ஏற்று நம் கனவதன் துணையாக 

இருந்தொளி காட்டுமெம் இறையோரே..


இன்னமும் நினைவினில் ஏங்குவோர் ஒருபால்

எங்கையோ இருக்கிறீர் எண்ணுவோர் ஒருபால்

முன்செய்த பாவமோ முனகுவோர் ஒருபால் 

முயன்றுமீள் எழவென முயல்பவர் ஒருபால் 

என்ன தான் வந்தினி இயம்புவர் ஒருபால் 

கல்லறை வாழ்கிற கடவுளே நீவிர் 

எம்முடை மனதுக்கு உம்பலந் தருவீர்

எமக்கொளி காட்டுவீர் இறையரே வாழ்வீர்..


கூவிய வானகம் கூவிய காற்று 

குறிதப்பாது வீழ்ந்தன குண்டுகள்

ஏவிய கணையினால் எங்கணும் சிதறல்  

இருப்பினும் தளரலை எமக்கென நின்றீர் 

காவிய வீரராய் ஆகியெம்  கண்முன் 

காட்டினீர் பாதையை காந்தளே நீவிர் 

காயம் விட்டேகினும் கண்களில் நெஞ்சில் 

கண்கண்ட தெய்வமாய் காவலாய் வாழ்வீர்..


No comments:

Post a Comment